நீளும் உன் கரங்கள் நிஜமென…

சத்தமின்றி யுத்தம் செய்யும் என் மனதின் ஓசைகள்!

Publié par
சத்தியா
à
11:52 AM
6
commentaires
Publié par
சத்தியா
à
11:44 AM
6
commentaires
Publié par
சத்தியா
à
3:24 PM
5
commentaires
Publié par
சத்தியா
à
5:46 AM
13
commentaires

உன் ஞாபகங்கள் !
*********************
என் கண்களிலிருந்து வடியும்
கண்ணீரின்
வெப்பக் கொடுமையை விட
அந்தக் கண்ணீர்த் துளியில் வரும்
உன் ஞாபகங்கள்
மிகவும் கொடுமையானவை!
நீ பிரிந்திருக்கிறாயா...?
அல்லது
விலகி இருக்கிறாயா...?
எனக்கு
எதுவுமே புரியவில்லை!
ம்...
இப்போது உனக்கு
"விலகல்" பழகியிருக்கும்
ஆனால் எனக்கு...?
------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----
Publié par
சத்தியா
à
2:41 PM
19
commentaires

புரிகிறதா நேசத்தின் ஆழம் ?
********************************
பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே...?
பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை...?
இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
ம்...
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று...?
Publié par
சத்தியா
à
3:55 PM
10
commentaires

வரமொன்று நான் வேண்டி !
******************************
உன் விழி வீச்சில்
என் விழி மயக்கி...
உன் வார்த்தை ஜாலங்களால்
என் இதய வாசல் திறந்தாய்!
தூண்டிலில் சிக்கிய மீனாய்
உள்ளம் துடிதுடித்து...
அடங்க மறுக்கும்
புரவியாய்
உன் நினைவில்
தடுக்கி விழுந்து
எழுந்து துடித்து
அழுது தவித்து...
நீ வரும் நேரமெல்லாம்
வரமொன்று நான் வேண்டி
வாசலில் தவமிருக்க...
நீ
வரம்தான் தரவில்லை
சாபங்களையாவது
தூவாமல் செல்!
------நட்போடு------
வலம் வரும் இவள்
-----"சத்தியா" -----
Publié par
சத்தியா
à
2:41 PM
10
commentaires